காத்தான்குடி பீச்வேய் ஹோட்டலில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பிற்பகல் 4.30 க்கு இந்நிகழ்வு தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அஷ்ஷைய்க் ஸஃத், மற்றும் அஷ்ஷைய்க் முஸ்தபா ஆகியோர் கலந்து காதுக்கு இனிமையான அழகிய இஸ்லாமிய கஸீதாக்களை, நபி புகழ் பாடல்களை பாடி பார்வையாளர்களை பிரமிக்கவைத்தனர். இவர்களுடன் கொழும்பு இமாம் அல் அஷ்அரீ மற்றும் ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கல்லூரியின் கஸீதா குழுவினரும் இணைந்து கஸீதா பாடினர்.

ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கல்லூரியின் கௌரவ பணிப்பாளர் அஷ்ஷேய்க் நதீர் இல்மீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்கசொற்பொழிவுகள், இனிமையான கஸீதாக்கள் இடம்பெற்றதுடன், கௌரவ பணிப்பாளர் அவர்களினால் ஜமாலிய்யாவின் வரலாறு மற்றும் ஜம்இய்யாவின் மன்ஹஜ் பற்றிய தெளிவுரையும் இடம்பெற்றதுடன், ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக்கல்லூரி அதிபர் அஷ்ஷைய்க் ஸப்றாஸ் பஹ்ஜீ அவர்களின் கல்லூரியின் தற்போதைய பாடத்திட்டம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பான உரையும் நடைபெற்றது.

இச் சங்கைமிகு நிகழ்வில் காத்தான்குடியின் அறபுக் கல்லூரி மற்றும் பாடசாலை அதிபர்கள், உஸ்தாத்மார்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பேஷ் இமாம்கள், இஸ்லாமிய கலாச்சார திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியை சிறப்புற நிறைவேற்ற பங்காற்றிய ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக்கல்லூரி நிர்வாகிகள், ஊர்மக்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் ஜம்இய்யா நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.